விழுப்புரம்கைலாசநாதர் கோவில் தேரோட்டம்


விழுப்புரம்கைலாசநாதர் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 5 May 2023 6:45 PM (Updated: 5 May 2023 6:46 PM)
t-max-icont-min-icon

விழுப்புரம் கைலாசநாதர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்


விழுப்புரம் திரு.வி.க. வீதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் 12 நாட்கள் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 27-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாள் காலையும் பல்லக்கு உற்சவமும், இரவு சூரியபிரபை, நாக வாகனம், ரிஷபவாகனம், யானை வாகனம், குதிரை வாகனங்களில் சாமி வீதியுலாவும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில், பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் எழுந்தருளினார். இந்த தேரை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்துச்சென்றனர். இந்த தேர், விழுப்புரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அதன் பிறகு சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story