கருவேல மரங்கள் தீயில் எரிந்து நாசம்


கருவேல மரங்கள் தீயில் எரிந்து நாசம்
x

கருவேல மரங்கள் தீயில் எரிந்து நாசம் ஆனது.

கரூர்

திருமாநிலையூர் அருகே கரூர்-திருச்சி சாலை உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் பின்புறம் அமராவதி ஆற்றங்கரையோரம் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள் நேற்றுமுன்தினம் இரவு திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தன. அப்போது காற்றின் வேகம் காரணமாக நான்கு திசைகளிலும் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கருவேல மரங்கள் தீயில் எரிந்து நாசமானது.


Related Tags :
Next Story