2 கோவில்களில் நகை, பணம் திருட்டு


2 கோவில்களில் நகை, பணம் திருட்டு
x

நெல்லை அருகே 2 கோவில்களில் நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை அருகே 2 கோவில்களில் நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

கோவில்கள்

நெல்லையை அடுத்த நடுக்கல்லூர் பி.ஆர். காலனியில் முத்துமாரியம்மன், கருப்பசாமி கோவில்கள் ஒரே காம்பவுண்டில் உள்ளது. மர்ம நபர்கள் முத்துமாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் உள்ள நாலு பவுன் தங்கத்தாலி, மூக்குத்தி, கம்மல் ஆகியவற்றை திருடி சென்று உள்ளனர். மேலும் சுத்தமல்லி பெரியார் நகரில் உள்ள முத்துமாலை அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பரபரப்பு

தொடர்ந்து ஒரே நாளில் 2 கோவிலில் திருட்டு சம்பவம் நடந்ததால் சுத்தமல்லி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் சுத்தமல்லி பாரதியார் நகரில் செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் 66 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், தற்போது கோவிலில் திருட்டு சம்பவம் நடந்ததால் ெபாதுமக்கள் பீதியில் உள்ளனர்.


Next Story