வந்தவாசி அருகே ஜீப் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து


வந்தவாசி அருகே ஜீப் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து
x

வந்தவாசி அருகே ஜீப் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

திருவண்ணாமலை

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரை அடுத்த ராமாபுரம் மோகலவாடி பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 49). இவர், தனது மனைவி, மகன், மகளுடன் வேலூரில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜீப்பில் வந்தார். ஜீப்பை, ராமமூர்த்தி ஓட்டினார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமம் மேல்மருவத்தூர் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சாலையின் குறுக்கே இருசக்கர வாகனம் வந்ததால் ராமமூர்த்தியின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஜீப்பில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.


Next Story