ஆண்டுக்கு ரூ.399-ல் ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு திட்டம்


ஆண்டுக்கு ரூ.399-ல் ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு திட்டம்
x
தினத்தந்தி 10 Nov 2022 6:45 PM GMT (Updated: 10 Nov 2022 6:46 PM GMT)

ஆண்டுக்கு ரூ.399-ல் ரூ.10 லட்சம் வரை உள்ள விபத்திற்கான காப்பீட்டு திட்டத்தில் பொதுமக்கள் இணைந்து பயன்பெறலாம் என்று அஞ்சல கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

காரைக்குடி,

ஆண்டுக்கு ரூ.399-ல் ரூ.10 லட்சம் வரை உள்ள விபத்திற்கான காப்பீட்டு திட்டத்தில் பொதுமக்கள் இணைந்து பயன்பெறலாம் என்று அஞ்சல கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

காப்பீட்டு திட்டம்

காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஹூசைன்அகமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியின் டாடா ஏ.ஐ.ஜி. ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டிற்கு வெறும் ரூ.399 மற்றும் ரூ.396-ல் ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாமானிய மக்களுக்கும் விபத்து காப்பீடு திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள அஞ்சலகங்கள் தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலம் மிக குறைந்த பிரீமியம் தொகையுடன் கூடிய இந்த விபத்து காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

5 நிமிடங்களில் பாலிசி

18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம். விண்ணப்ப படிவம், அடையாள முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்தவிதமான காகித பயன்பாடியின்றி தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன் விரல் ரேகை மூலம் வெறும் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுகிறது.

ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு, விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம் மற்றும் பக்கவாதம் மற்றும் விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள் (உள்நோயாளிகளுக்கு) அதிக பட்சம் ரூ.60 ஆயிரம் வரையும், புறநோயாளிக்கு அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் வரையும் உள்ளது. விபத்தினால் மரணம், ஊனம் மற்றும் பக்கவாதம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் அதிகபட்சம் 2 குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு ரூ.10 லட்சம் வரை உள்ளது.

பயன்பெறலாம்

விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு தினப்படி தொகை ஒரு நாளைக்கு ரூ.ஆயிரம் வீதம் 10 நாட்களுக்கு (1 நாட்கள் கழித்து) வழங்கப்படும். விபத்தில் பாதிக்கப்பட்டவரை பார்க்க பயணிக்கும் குடும்பத்தினரின் பயண செலவுகளுக்கு அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். விபத்தினால் உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்டால் ஈமச்சடங்கு செய்ய ரூ.5000 ஆயிரம் வழங்கப்படும்.

ஆண்டுக்கு ரூ.399 மற்றும் ரூ.396 வரை உள்ள இவற்றிக்கு பல்வேறு பலன்களை வழங்கும் இந்த குழு விபத்து காப்பீட்டு பாலிசியை ஒருவர் எடுப்பதன் மூலம் பல்வேறு பயன்கள் உள்ளதால் பொதுமக்கள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர்கள் மூலம் இந்த விபத்து திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story