விசாரணை கைதி - போலீசார் இடையே துப்பாக்கிச்சூடு சம்பவம்: தனிப்படை போலீசார் ஆய்வு


விசாரணை கைதி - போலீசார் இடையே துப்பாக்கிச்சூடு சம்பவம்: தனிப்படை போலீசார் ஆய்வு
x

மேலும் ஏதாவது ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என தனிப்படை போலீசார் ஆய்வுசெய்து வருகின்றனர்.

கோவை,

கோவையில் ஆயுத வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

துப்பாக்கிச்சூடு நடத்திய கைதி சஞ்செய் ராஜாவை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்ய சென்ற போது அதை எடுத்து போலீசாரை சஞ்சய் ராஜ் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

கோவை காட்டு மடம் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் சந்திரசேகர் சுட்டதில் காலில் காயம் அடைந்த சஞ்சய் ராஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது கைதியிடம் இருந்த 2 துப்பாக்கிகள் பறிமுதல் பெய்யப்பட்டது.

இது தொடர்பாக சம்பவம் நடந்த கரட்டுமேடு பகுதியில் தனிப்படை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பகுதியில் மேலும் ஏதாவது ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


Next Story