இந்திரா காந்தி பிறந்த நாள் விழா


இந்திரா காந்தி பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 20 Nov 2022 6:45 PM GMT (Updated: 20 Nov 2022 6:47 PM GMT)

சுரண்டையில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா நடந்தது

தென்காசி

சுரண்டை:

சுரண்டை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா சுரண்டை பஸ் நிலையம் முன்பு கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன் முன்னிலை வகித்தார். தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

நகராட்சி உறுப்பினர்கள் அமுதா சந்திரன், வேல்முத்து, நிர்வாகிகள் பால் என்ற சண்முகவேல், எஸ்.ஆர்.பால்துரை, பிரபாகர் பாலகணேஷ் சங்கர், ரமேஷ், சமுத்திரம், மகேஷ், கந்தையா, சாலமோன், ஜெயச்சந்திரன், கஸ்பா அருணாசலம், ஆட்டோ செல்வராஜ், ஆனந்த், லூர்து கோபி, பொன்ராஜ், ஜெபராஜ் டேவிட், கணேசன், தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story