அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் இந்தியன் ரெயில்வே அணி வெற்றி


அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் இந்தியன் ரெயில்வே அணி வெற்றி
x

அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் இந்தியன் ரெயில்வே அணி வெற்றி பெற்றுள்ளது.

கரூர்

தனியார் நிறுவனங்கள் மற்றும் கரூர் கூடைப்பந்து கிளப்பும் இணைந்து நடத்தும் 63-ம் ஆண்டு அகில இந்திய ஆண்கள் கூடைப்பந்து போட்டியும், 9-ம் ஆண்டு அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டியும் கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. 5-வது நாளான நேற்று காலை நடைபெற்ற ஆண்கள் பிரிவு போட்டியில் இந்தியன் ரெயில்வே அணியும், பேங்க் ஆப் பரோடா அணியும் மோதின. இப்போட்டியில் இந்தியன் ரெயில்வே அணி 71-44 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

இன்று (சனிக்கிழமை) காலை அரை இறுதி போட்டிகளும், மாலை 7 மணியளவில் இறுதிப்போட்டியும் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது.

இப்போட்டிக்கான ஏற்பாடுகளை கரூர் கூடைப்பந்து கிளப் தலைவர் விஎன்சி பாஸ்கர், செயலாளர் முகமது கமாலுதீன் உள்பட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


Next Story