சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகை


சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகை
x

சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.

பெரம்பலூர்

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. அதன்படி பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழாவையொட்டி கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நாளை காலை 9.05 மணிக்கு தேசிய கொடியேற்றி வைத்து, மரியாதை செலுத்தி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொள்கிறார். பின்னர் அவர் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கிறார். அதனை தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கி கவுரவிக்கிறார். முடிவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இதையொட்டி மைதானத்தில் போலீசார் நேற்று சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.


Next Story