தொடர் மழை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


தொடர் மழை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
x
Lingavel Murugan M 10 Oct 2022 1:22 AM GMT

தொடர் மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. காலையில் பெய்ய தொடங்கிய மழை மதியம் சிறிது இடைவெளி விட்டு மாலையில் தொடர்ந்து பெய்தது. இரவிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

இந்த நிலையில் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று (திங்கட்கிழமை) 6 முதல் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டுள்ளார்.


Next Story