தூத்துக்குடியில் தொழிலாளியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது



தூத்துக்குடியில் தொழிலாளியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மகன் துரைராஜ் (வயது 48). தொழிலாளி. இவர் அந்த பகுதியில் நின்று கொண்டு இருந்த போது, அங்கு மதுபோதையில் வந்த தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த முருகன் மகன் வெங்கடேஷ் (21), இளங்கோ மகன் கார்த்தீசுவரன் (19) ஆகிய 2 பேரும் சேர்ந்து துரைராஜிடம் தகராறு செய்து, அவரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குபதிவு செய்து வெங்கடேஷ் மற்றும் கார்த்தீசுவரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire