75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுள்ள செஞ்சிக்கோட்டை..!


75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுள்ள செஞ்சிக்கோட்டை..!
x

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் செஞ்சிக்கோட்டை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுள்ளது.

செஞ்சி,

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை அமுதப்பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு கட்ட நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இவ்விழாவை விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடும் வகையில் மத்திய அரசின் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சிக்கோட்டையின் மதில் சுவர்கள் மூவர்ண நிறத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இதனால் செஞ்சிக்கோட்டை தற்போது மூவர்ணத்தில் ஜொலிக்கிறது. இதனை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.


Next Story