தமிழகத்தில் 3 இடங்களில் சதமடித்த வெயில்


தமிழகத்தில் 3 இடங்களில் சதமடித்த வெயில்
x

தமிழகத்தில் இன்று 3 இடங்களில் 100 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது

சென்னை,

தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக சாலை ஓரத்தில் உள்ள கடைகளில் பழச்சாறுகள், தர்பூசணி, பழ வகைகள், கரும்பு சாறு, இளநீர் போன்றவற்றை பருகி இளப்பாறி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று 3 இடங்களில் 100 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. தமிழ்நாட்டில் இன்று அதிக வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு,

திருத்தணியில் 102.3, கரூர் பரமத்தியில் 101, வேலூர் 99.68, திருத்தணி 102.38, சென்னை மீனம்பாக்கம் 99.32, கோயம்புத்தூர் 97.16, மதுரை விமானநிலையம் 98.96, நாமக்கல் 98.6, சேலம் 98.78, திருச்சி 95 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.


Next Story