நன்னடத்தை பிணையை மீறியவர் சிறையில் அடைப்பு


நன்னடத்தை பிணையை மீறியவர் சிறையில் அடைப்பு
x

நன்னடத்தை பிணையை மீறியவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை பெரியகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இசக்கிதுரை என்ற சுபாஷ் (வயது 24). இவருக்கு நெல்லை கோர்ட்டில் 6 மாதத்திற்கான நன்னடத்தை பிணை பெறப்பட்டது. அதன் பின்னரும் கடந்த 22-ந் தேதி அம்பை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நன்னடத்தை பிணையை மீறி குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், நெல்லை கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பித்தார். அதன் மீது விசாரணை நடத்திய நடுவர், நன்னடத்தை பிணையை மீறி குற்றம் புரிந்ததற்காக சுபாசை 5 மாதங்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


Next Story