கவர்னர் விவகாரம் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு-அமைச்சர் ரகுபதி பேட்டி


கவர்னர் விவகாரம் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு-அமைச்சர் ரகுபதி பேட்டி
x

கவர்னர் விவகாரம் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டை

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன கருவிகள் தேவைப்படுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட உள்ளது.கவர்னருடன் மோதல் போக்கு வேண்டாம் என்று தான் தமிழக அரசு நினைக்கிறது. கவர்னர் விவகாரத்தில் மற்ற மாநிலத்தில் வரும் தீர்ப்புகள் தமிழகத்திற்கும் பொருந்தும். தமிழக அமைச்சரவை கூட்டம் விரைவில் கூட உள்ளது. அப்போது கவர்னர் விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story