மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துக: கமல்ஹாசன்


மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துக: கமல்ஹாசன்
x

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான சூழல் நிலவுவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கொடூர சம்பவத்திற்கு பிரதமர் உட்பட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மணிப்பூரில் நடைபெற்றுள்ள கொடூரத்தால் ஜனநாயகம் சீர்குலைந்துவிட்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான சூழல் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story