பா.ஜ.கவின் ஊழல்களை மக்களுக்கு தெரியப்படுத்துவேன் - காங்கிரஸ் தகவல் தொடர்புதுறை தலைவர் ஆனந்த் சீனிவாசன்


பா.ஜ.கவின் ஊழல்களை மக்களுக்கு தெரியப்படுத்துவேன் - காங்கிரஸ் தகவல் தொடர்புதுறை தலைவர் ஆனந்த் சீனிவாசன்
x

தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் தொடர்புதுறை தலைவராக ஆனந்த் சீனிவாசன் பதவி ஏற்றுக்கொண்டார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு துறை தலைவராக ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று சத்தியமூர்த்திபவனில் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.

அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தல் சம்பந்தமாக தி.மு.க. - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை சுமூகமாக போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களுக்குள் இரு கட்சிகளின் தலைமையும் பேசி முடிவெடுக்கும். தமிழகம், புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெறும்.

பா.ஜ.க.வின் ஊழல்களை மக்களுக்கு தெரியப்படுத்துவேன். பதஞ்சலி யோகா மக்களின் உயிரோடு விளையாடி உள்ளது. ஆயுஸ் மினிஸ்டரி கண்ணை மூடியுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு கண்டித்துள்ளது. இதுமாதிரி விஷயங்களை தமிழக மக்களுக்கு எடுத்து சொல்லவே கட்சி தலைமை என்னை இந்த பதவியில் நியமித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story