கட்டையால் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன் - பதைபதைக்க வைக்கும் வீடியோ


கட்டையால் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன் - பதைபதைக்க வைக்கும் வீடியோ
x

சித்திரவதை செய்வதாக போலீசில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.

கோவில்பட்டி,

மது போதையில் கணவன் சித்திரவதை செய்வதாக போலீசில் புகார் அளித்ததால், ஆத்திரமடைந்த கணவன், மனைவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த பாலமுருகேஸ்வரி என்பவர் தனது கணவர் சின்ன மருது மீது போலீசில் புகார் அளித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சின்ன மருது தனது மனைவி மற்றும் மகனை கட்டையால் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக ஏற்கனவே போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறி, பால முருகேஸ்வரி தனது மகனுடன் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு புகார் அளித்தார்.

இதையடுத்து அவரது புகாரை ஏற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி உறுதி அளித்தனர். இந்த நிலையில் தனது மனைவி மற்றும் மகனை சின்ன மருது மது போதையில் கட்டையால் கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.


Next Story