பெண்ணை தாக்கிய கணவர் கைது


பெண்ணை தாக்கிய கணவர் கைது
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 18 March 2023 6:45 PM GMT)

பெண்ணை தாக்கிய கணவர் கைது

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 42). இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (34). துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று குடும்ப தகராறு காரணமாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஜெயபிரகாஷ் ஆத்திரத்தில் தள்ளி விட்டதில் ரேவதிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபிரகாசை கைது செய்தனர்.


Next Story