ரூ.3½ கோடிக்கு விற்றுவிட்டு வீட்டை காலி செய்ய மறுத்த கணவன்-மனைவி கைது


ரூ.3½ கோடிக்கு விற்றுவிட்டு வீட்டை காலி செய்ய மறுத்த கணவன்-மனைவி கைது
x

ரூ.3½ கோடிக்கு விற்றுவிட்டு வீட்டை காலி செய்ய மறுத்த கணவன் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை வியாசர்பாடி அடுத்த எம்.கே.பி.நகர் 3-வது லிங்க் ரோட்டை சேர்ந்தவர் முனிஸ்வர கணேசன் (வயது 67). இவர், கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் உள்ள ரமேஷ் (42) என்பவரது முதல் மனைவி வள்ளி (36), 2-வது மனைவி கவுரி (27) ஆகியோருக்கு சொந்தமான வீட்டை ரூ.3½ கோடிக்கு வாங்கினார்.

ஆனால் வீட்டை விற்ற அவர்கள், அதனை காலி செய்யாமல், வேறு ஒருவருக்கு ரூ.1½ கோடிக்கு லீசுக்கு விட்டதாக தெரிகிறது. இதனால் தான் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டார். ஆனால் பணத்தையும் கொடுக்காமல், வீட்டையும் காலி செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

இதுபற்றி கொடுங்கையூர் போலீசில் முனிஸ்வர கணேசன் அளித்த புகாரின்பேரில் ரமேஷ் மற்றும் அவருடைய மனைவிகளான வள்ளி, கவுரி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story