களைகட்டும் தீபாவளி; சென்னை தி.நகரில் புத்தாடை வாங்க குவிந்த மக்கள்


களைகட்டும் தீபாவளி; சென்னை தி.நகரில் புத்தாடை வாங்க குவிந்த மக்கள்
x

Image Courtesy: AFP

தீபாவளியையொட்டி சென்னை தி.நகரில் புத்தாடை, பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர்.

சென்னை,

தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை தி.நகரில் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை விற்பனை குறைவாக இருந்த நிலையில் இந்த ஆண்டு மக்கள் கூட்டம் அதிகரித்து விற்பனையும் அதிகரித்துள்ளது.

தி.நகரில் உள்ள கடைகளில் புத்தாடை, இனிப்புகள் வாங்கி மக்கள் தீபாவளிக்கு ஆயத்தமாகி வருகின்றனர். புத்தாடைகள், பொருட்களை தி.நகரில் மக்கள் கூட்டம் குவிந்தது. மக்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளதால் பாதுகாப்பு பணியில் அதிக அளவில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Next Story