தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி இந்து மக்கள் கட்சி கோரிக்கை


தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி இந்து மக்கள் கட்சி கோரிக்கை
x

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரூர்

கரூர் மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்டத்தலைவர் காலனி மணி தலைமையில் அக்கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள், சர்வதேச விழாக்கள் நடக்கும் இடங்களில் மது குடிக்க அனுமதிக்கும் விதமாக சட்டத்தை கொண்டு வர தமிழக அரசு முயற்சி செய்தது வேதனையை அளிக்கிறது. ஏ.டி.எம் மூலம் பீர்பாட்டில்கள், மது கிடைக்க செயல்படுத்த திட்டத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story