கனமழை எதிரொலி- சென்னையில் 14 சுரங்கப்பாதைகள் மூடல்


கனமழை எதிரொலி- சென்னையில் 14 சுரங்கப்பாதைகள் மூடல்
x
தினத்தந்தி 4 Dec 2023 2:45 AM GMT (Updated: 4 Dec 2023 4:39 AM GMT)

கனமழை காரணமாக சென்னையில் 14 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

சென்னை,

'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

சென்னை எழும்பூர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, காவல் ஆணையர் அலுவலகம், வேப்பேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இடுப்பளவு தேங்கியுள்ள மழை நீரில் செல்ல முடியாமல் வாகனங்கள் ஆங்காங்கே பழுதாகி நிற்கின்றன. சாலைகளில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், கனமழை எதிரொலியாக சென்னையில் 14 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக இந்த சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.


Next Story