வைக்கோல் போர்- மரங்கள் தீயில் எரிந்து நாசம்


வைக்கோல் போர்- மரங்கள் தீயில் எரிந்து நாசம்
x

வைக்கோல் போர்- மரங்கள் தீயில் எரிந்து நாசமானது.

கரூர்

நொய்யல் அருகே சேமங்கி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் திலகவதி (வயது 40). இவர் கால்நடைகளுக்கு தீவனமாக போடுவதற்காக வீட்டின் அருகில் ரூ.1 லட்சம் மதிப்பிலான வைக்கோல்போர் போட்டு வைத்திருந்தார். இந்தநிலையில் காற்றின் காரணமாக மேலே சென்ற மின்கம்பி வைக்கோல்போரில் உரசி தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இதேபோல் புகழூர் காகித ஆலை பின்புறம் உள்ள நல்லியாம்பாளையம் பகுதியில் வெற்று நிலத்தில் காய்ந்திருந்த மரங்கள், செடி, கொடிகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர்.


Related Tags :
Next Story