அரசு-தனியார் பஸ் மோதல்


அரசு-தனியார் பஸ் மோதல்
x

நெல்லை டவுனில் அரசு-தனியார் பஸ்கள் மோதிக் கொண்டன.

திருநெல்வேலி

நெல்லை டவுன் மேலரதவீதியில் நேற்று இரவு ஐகிரவுண்டு நோக்கி ஒரு தனியார் பஸ் புறப்பட்டது. அதேபோல் மானூர் அருகே உள்ள களக்குடிக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த 2 பஸ்களும் ஒன்றையொன்று முந்தி செல்ல முயற்சி செய்த போது உரசி விபத்துக்குள்ளானது. ஆனால் இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதபற்றி தகவல் அறிந்த டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்று, 2 பஸ்களையும் மீட்டு போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர். இதேபோல் நெல்லை சிந்துபூந்துறை சாலைத்தெருவில் நேற்று இரவு சென்று கொண்டிருந்த தனியார் ஆட்டோ திடீரென்று கவிழ்ந்தது. இதில் யாரும் காயம் அடையவில்லை. இந்த விபத்துகள் குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story