அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பபாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கருவூலம் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் ஜோஷி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தீனதயாளன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். செயலாளர் சேகர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், ஒருங்கிணைந்த மனிதவள மேலாண்மை திட்டத்தை கைவிட வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில் ஜாக்டோ ஜியோ செய்தி தொடர்பாளர் வாரா உள்பட ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சுமதி நன்றி கூறினார்.


Next Story