அரசு ஊழியர்கள் தர்ணா


அரசு ஊழியர்கள் தர்ணா
x

சங்கராபுரத்தில் அரசு ஊழியர்கள் தர்ணா

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஆனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கொளஞ்சிவேலு, செயலாளர் மகாலிங்கம், பொருளாளர் ரவி, இணை செயலாளர் சாமிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமாரதேவன் வரவேற்றார்.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு புறந்தள்ளி இருப்பதை கண்டித்தும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் வேலு, காஞ்சனாமேரி, விஜயா, வள்ளி, சாந்தி, அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் வீரபத்திரன், சாமிதுரை, முத்து, பாசில், பாலமுருகன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட நிர்வாகிகள் சந்திரசேகரன், ரங்கசாமி, வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் தினேஷ், கல்யாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story