பொதுமக்களுக்கு இலவச குடை


பொதுமக்களுக்கு இலவச குடை
x
தினத்தந்தி 23 May 2023 6:45 PM GMT (Updated: 23 May 2023 6:46 PM GMT)

கோவில்பட்டியில் பொதுமக்களுக்கு இலவச குடை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகரசபை தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான கருணாநிதி ஆலோசனையின் பேரில் 22-வது வார்டு நகரசபை கவுன்சிலர் ஜேஸ்மின் லூர்து மேரி, அரசு மாவட்ட மருத்துவமனை எதிரில் நீர்- மோர் பந்தல் நடத்தி வருகிறார்.

நேற்று கனிமொழி எம்.பி. ஆலோசனையின் பேரில் வெயிலின் தாக்கத்தை தணிக்க பெண்கள் மற்றும் பொது மக்களுக்கு இலவச குடைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story