பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்; எம்.எல்.ஏ. வழங்கினார்


பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்; எம்.எல்.ஏ. வழங்கினார்
x
தினத்தந்தி 22 Sep 2023 6:45 PM GMT (Updated: 22 Sep 2023 6:45 PM GMT)

புளியங்குடியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.

தென்காசி

புளியங்குடி:

புளியங்குடி இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் டாக்டர் சதன் திருமலை குமார் எம்.எல்.ஏ., புளியங்குடி நகர்மன்ற தலைவி விஜயா சவுந்தரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில் இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளி சங்கத் தலைவர், ஊர் நாட்டாமைகள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர் மாணவிகள் கலந்து கொண்டனர். புளியங்குடி காயிதே மில்லத் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு மேலப்பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டி தலைவர் மௌலல் கௌமி தலைமை தாங்கினார். உதவி தலைவர் சாகுல்ஹமீது, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் காலிதீன் எம் முகமது உசேன், முகமது முகைதீன் ஆலிம், இளைஞர் மன்றம் நிஜாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை சபூர் பாத்திமா வரவேற்றார். டாக்டர் சதன் திருமலை குமார் எம்.எல்.ஏ. மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.

விழாவில் முன்னாள் தலைமை ஆசிரியை சுபைதா பானு, தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் ஹமீது, ம.தி.மு.க. மாவட்ட பொருளாளர் அலாவுதீன், உதவி தலைமை ஆசிரியை சகிலா பானு, ம.தி.மு.க. நகரச் செயலாளர் ஜாஹிர் உசேன், மணிச்சுடர் சாகுல் ஹமீது உட்பட பலர் பங்கேற்றனர். ஜமாஅத் கமிட்டி செயலாளர் அபுதாகிர் நன்றி கூறினார்.


Next Story