பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்


பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
x

பாளையங்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அப்துர் ரஹ்மான் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி தாளாளர் எம். கே.எம்.முகம்மது நாசர் தலைமை தாங்கினார். முஸ்லிம் அனாதை நிலைய நிர்வாக கமிட்டி தலைவர் செய்யது அகமது கபீர், செயலாளர் எம்.கே.எம்.முகம்மது ஷாபி, பொருளாளர் ஆரிப் சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் முகமது முத்து மீரான் வரவேற்று பேசினார்.

அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் சாகுல் ஹமீது நன்றி கூறினார்.


Next Story