பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்


பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
x
தினத்தந்தி 29 July 2023 6:45 PM GMT (Updated: 29 July 2023 6:45 PM GMT)

கோவில்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் பங்குத்தந்தை சார்லஸ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி நகரசபை தலைவரும், நகர தி.மு.க. செயலாளருமான கருணாநிதி கலந்துகொண்டு 78 மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் அலெக்ஸ் ஜான் வரவேற்றார். மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஏஞ்சலா, நகரசபை கவுன்சிலர் உமா மகேஸ்வரி, பங்கு பேரவை சின்னத்துரை மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story