பஸ் சக்கரத்தில் சிக்கி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாவு


பஸ் சக்கரத்தில் சிக்கி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாவு
x

காஞ்சீபுரம் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரிதாபமாக இறந்தார்.

காஞ்சிபுரம்

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்

காஞ்சீபுரத்தை அடுத்த அய்யங்கார்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 65). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவரது மனைவி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

காஞ்சீபுரம் சேக்குப்பேட்டை சாலியர் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி மசாலா பொருள்கள் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் காஞ்சீபுரம் பஸ் நிலையம் பகுதியில் இருந்து மூங்கில் மண்டபம் நோக்கி தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சென்றார்.

சாவு

அப்போது பின்புறமாக வேலூரில் இருந்து காஞ்சீபுரம் வழியாக தாம்பரம் நோக்கி சென்ற அரசு பஸ் பன்னீர்செல்வம் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது, இதில் பன்னீர் செல்வம் பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விஷ்ணுகாஞ்சி போலீசார் பன்னீர்செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story