களைகட்டிய மீன்பிடி திருவிழா


களைகட்டிய மீன்பிடி திருவிழா
x
தினத்தந்தி 2 April 2023 6:45 PM GMT (Updated: 2 April 2023 6:47 PM GMT)

சிங்கம்புணரி அருகே கிருங்காகோட்டை செட்டியார் ஊருணியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிருங்காகோட்டை செட்டியார் ஊருணியில் மீன்பிடி திருவிழா நடைபெறுவதாக அறிவிப்பு செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை முதலே கிருங்காகோட்டையை சுற்றியுள்ள வையாபுரிபட்டி, பிரான்மலை, வேங்கைபட்டி, ஒடுவன்பட்டி, அணைக்கரைப்பட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஊத்தா கூடையுடன் மீன் பிடிக்க காத்திருந்தனர். கிராமத்து முக்கியஸ்தர்கள் ஊருணியின் கரையோரத்தில் நின்று வெள்ளைக் கொடி காட்டியவுடன் மீன்பிடிக்க அனுமதி கிடைத்த மகிழ்ச்சியோடு போருக்கு போகும் போர் வீரர்களை போல மின்னல் வேகத்தில் ஓடி சென்று போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். இந்த பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் பல்வேறு கிராமங்களில் இருந்து வருகை தந்த பலருக்கும் விரால், கெளுத்தி, கட்லா, கெண்டை என பல வகை மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். இதுபோன்ற மீன் பிடி திருவிழாவால் கிராம மக்களின் ஒற்றுமை பண்பாடு வளர வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து கூறினார்கள்.


Next Story