வீட்டு வேலிக்கு தீவைப்பு


வீட்டு வேலிக்கு தீவைப்பு
x

வீட்டு வேலிக்கு தீவைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநெல்வேலி

இட்டமொழி:

வடக்கு விஜயநாராயணம் அருகே உள்ள பெரியநாடார் குடியிருப்பு தெற்குத்தெருவை சேர்ந்தவர் ஜெபத்துரை மனைவி ஞானசெல்வம் (வயது 55). அதே ஊரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் பொன்ராஜ் (67). இவர் தனது வீட்டு வேலைக்கு வெள்ளநீர் கால்வாயில் இருந்து மணல் எடுத்து பயன்படுத்தியதாக ஞானசெல்வத்தின் மகன் ஸ்டாலின் போலீசாருக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் பொன்ராஜ், அதே ஊரைச் சேர்ந்த துரைராஜ் மகன் சுவாமிதாஸ் (34) ஆகியோர் சேர்ந்து ஞானசெல்வம் வீட்டை சுற்றியுள்ள ஓலையால் ஆன வேலியை தீ வைத்து எரித்து, கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வடக்கு விஜயநாராயணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story