சென்னையில் மின்சாதன பொருட்கள் கிடங்கில் தீ விபத்து - ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ அணைப்பு


சென்னையில் மின்சாதன பொருட்கள் கிடங்கில் தீ விபத்து - ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ அணைப்பு
x

சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் மின்சாதன பொருட்கள் கிடங்கில் ஏற்பட்ட தீயை ஒரு மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் அணைத்தனர்.

சென்னை,

சென்னையை அடுத்த மேடவாக்கம் விமலா நகரில் உள்ள மின்சாதன பொருட்கள் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதி முழுவதும் புகை மண்டலாக மாறியது. இதனால் மக்கள் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டனர்.

இந்த நிலையில் தீ விபத்து குறித்து தகவலறிந்து, துரைப்பாக்கம், வேளச்சேரி ஆகிய இடங்களில் இருந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்து குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story