வயல் பகுதியில் தீ விபத்து


வயல் பகுதியில் தீ விபத்து
x

வள்ளியூரில் வயல் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூரில் இருந்து கூடங்குளம் செல்லும் சாலையை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் நேற்று திடீரென காய்ந்த புற்கள் தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகம் காரணமாக தொடர்ந்து மளமளவென பற்றி எரிந்த தீ அருகில் உள்ள வயல் பகுதிகளிலும் பரவியது.

இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இந்த வயல் பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கியாஸ் குடோன் மற்றும் பெட்ரோல் பங்க் உள்ளது. இதனால் அருகில் இருந்தவர்கள் உடனடியாக வள்ளியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


Related Tags :
Next Story