புனித கார்மேல் அன்னை ஆலய தேர்த்திருவிழா


புனித கார்மேல் அன்னை ஆலய தேர்த்திருவிழா
x

தென்கரைக்கோட்டையில் புனித கார்மேல் அன்னை ஆலய தேர்த்திருவிழா நடந்தது.

தர்மபுரி

மொரப்பூர்:

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே தென்கரைக்கோட்டை பாத்திமா நகரில் உள்ள புனித கார் மேல் அன்னை ஆலய தேர்த்திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் பங்கு தந்தை வினோத்லூயிஸ் தலைமையில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித கார்மேல் அன்னை மற்றும் புனித அந்தோணியார் சொரூபங்களை வைத்து அலங்கரிப்பட்ட தேர் பவனி வந்தது. பாத்திமா நகர் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக தேர் இழுத்து செல்லப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி வந்தனர்.


Next Story