மேல்மலையனூரில் பெண் பிணம்


மேல்மலையனூரில் பெண் பிணம்
x
தினத்தந்தி 21 Feb 2023 6:45 PM GMT (Updated: 21 Feb 2023 6:45 PM GMT)

மேல்மலையனூரில் பெண் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்

மேல்மலையனூர்,

மேல்மலையனூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்துக்கு பின்புறம் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெண்ணின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இருப்பினும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் இறந்த பெண் யார்?. அவர் தற்கொலை செய்து கொண்டாரா?. அல்லது யாரேனும் அவரை கொலை செய்து வீசிவிட்டு சென்றனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story