விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 March 2023 7:00 PM GMT (Updated: 17 March 2023 7:00 PM GMT)

சத்திரப்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சத்திரப்பட்டி பஸ்நிறுத்த பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமசாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அருள்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, சத்திரப்பட்டி அருகே ராமபட்டினம்புதூர், தா.புதுக்கோட்டையில் காட்டு யானை தாக்கி பலியான விவசாயிகளின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், காட்டு யானைகள் அட்டகாசத்துக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story