மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி


மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
x
தினத்தந்தி 21 Nov 2022 6:45 PM GMT (Updated: 21 Nov 2022 6:45 PM GMT)

விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள தென்னமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி மகன் மணிகண்டன்(வயது 35). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலை தனது மகன் சஜீத்துடன்(8) மோட்டார் சைக்கிளில் விழுப்புரம்- திருவண்ணாமலை மார்க்கமாக சோழகனூர் என்ற இடத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்தவர், மணிகண்டன், அவரது மகன் சஜீத் ஆகியோரின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தந்தை, மகன் இருவரும் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். சஜீத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story