வாகனம் மோதி விவசாயி சாவு


வாகனம் மோதி விவசாயி சாவு
x
தினத்தந்தி 6 Oct 2023 6:45 PM GMT (Updated: 6 Oct 2023 6:45 PM GMT)

திருக்கோவிலூர் அருகே வாகனம் மோதி விவசாயி இறந்தார்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே செங்கனாங்கொல்லை கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாசிவேல் மகன் ஜானகிராமன் (வயது 35). விவசாயி. சம்பவத்தன்று இவர் மோட்டர் சைக்கிளில் திருக்கோவிலூர்-ஆசனூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஜானகிராமன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டி யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story