காா் மோதி விவசாயி சாவு


காா் மோதி விவசாயி சாவு
x

நாங்குநேரி அருகே காா் மோதி விவசாயி இறந்தார்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே கலுங்கடி வடக்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி முருகன் (வயது 53). இவர் நேற்று முன்தினம் இரவு நாங்குநேரியில் இருந்து மனைவிக்கு மருந்து மாத்திரை வாங்கி விட்டு மொபட்டில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். நாங்குநேரி- களக்காடு சாலையில் வரும்போது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story