விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x

விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே குரும்பலூரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 58), விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். ராமசாமி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த அவர் ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை குடும்பத்தினர் காப்பாற்றியுள்ளனர். இந்தநிலையில் கடந்த 25-ந்தேதி குரும்பலூர் பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தத்தில் பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதனைக்கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமசாமி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story