மோட்டார் சைக்கிள் மோதி மனைவியுடன் விவசாயி படுகாயம்


மோட்டார் சைக்கிள் மோதி மனைவியுடன் விவசாயி படுகாயம்
x

சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மனைவியுடன் விவசாயி படுகாயம்

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

சின்னசேலம் அடுத்த தென் பொன்பரப்பி காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 76). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மதியம் மொபட்டில் தனது மனைவி ராஜலட்சுமி(67) என்பவரை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு சொந்த வேலை காரணமாக சின்னசேலம் நோக்கி சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். வழியில் அம்மையகரம் இணைப்பு சாலையில் இடது பக்கமாக நின்று கொண்டிருந்தபோது பின்னால் தண்டலை கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் ரகுச்சந்திரன்(20) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கோவிந்தராஜின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கணவன், மனைவி இருவரும் சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story