நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில்அங்கபிரதட்சணம் செய்த விவசாயியால் பரபரப்பு


நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில்அங்கபிரதட்சணம் செய்த விவசாயியால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Sep 2023 7:00 PM GMT (Updated: 11 Sep 2023 7:00 PM GMT)
நாமக்கல்

ராசிபுரம் தாலுகா பட்டணம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 40). விவசாயி. இவர் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்தார். கையில் வேப்பிலையுடன் வந்த அவர் திடீரென கோரிக்கையை நிறைவேற்றகோரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அங்கபிரதட்சணம் செய்ய தொடங்கினார். அவரை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தி, கலெக்டர் உமாவிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். அப்போது போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், பொது கிணற்றில் தண்ணீர் எடுக்ககூடாது என உறவினர் ஒருவர் தடை செய்து வருவதாக குற்றம்சாட்டினார். இந்த சம்பவம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story