மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆதரவாளர்களை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி...!


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆதரவாளர்களை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி...!
x

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

சென்னை,

சென்னை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தலைமை அலுவலகத்தில் உள்ள கதவுகள் உடைக்கப்பட்டன.

இதனிடையே, ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மோதலில் காயமடைந்து, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிமுக ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தார்.


Next Story