சென்னையில் நாளை முதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்


சென்னையில் நாளை முதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்
x

குடிநீா் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீா் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் விநியோகம் செய்யப்படும்.

சென்னை,

குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

சென்னை மந்தைவெளி ராமகிருஷ்ணா மடம் சாலையில் குடிநீா் பிரதான குழாய் இணைக்கும் பணிகள் நாளை முதல் செப்டம்பர் 26-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த பணிகள் நடைபெறும் நேரங்களில் தேனாம்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூா், நந்தனம், அபிராமபுரம், மந்தைவெளி ஆகிய பகுதிகளிலும், அடையாறு மண்டலத்துக்குட்பட்ட ராஜா அண்ணாமலைபுரத்திலும் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரைச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அவசரத் தேவைகளுக்கு இணையதளம் மூலம் குடிநீா் லாரிகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.குடிநீா் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீா் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் விநியோகம் செய்யப்படும். கூடுதல் தகவல்களுக்கு 044-4567 4567 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story