அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்


அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்
x

அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவிக்கு டாக்டர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர்,

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். இவர் குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று மருத்துவமனையில் எலும்பு சிகிச்சை மருத்துவராக பணியாற்றி வந்த எஸ்.பாபு நர்சிங் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி கூச்சலிட்டபடி, அறையில் இருந்து வெளியே ஓடி வந்து மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் மற்றும் சக நர்சிங் மாணவிகளிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அந்த மாணவியின் பெற்றோரிடம் இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். அதன்பேரில் மாணவியுடன் பெற்றோர் குடியாத்தம் டவுன் போலீசில், டாக்டர் பாபு மீது புகார் அளித்தனர். அதன்பேரில் குடியாத்தம் போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து டாக்டர் பாபு மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story