திமுக மகளிர் உரிமை மாநாடு தொடங்கியது - சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு


x
தினத்தந்தி 14 Oct 2023 12:02 PM GMT (Updated: 14 Oct 2023 12:24 PM GMT)

சென்னை நந்தனத்தில் திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டை ஒட்டி திமுக மகளிர் அணி சார்பில் இந்த மகளிர் உரிமை மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டிற்கு திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் வருகை தந்துள்ளனர். மேலும் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மெகபூபா முப்தி, சுப்ரியா சுலே உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள பல்வேறு பெண் தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.


Next Story