தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்


தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
x

பாளையங்கோட்டையில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் பாளையங்கோட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், "வருகிற 18-ந்தேதி நெல்லையில் தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அதனை தொடர்ந்து நடக்கும் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்திலும் அமைச்சர் கலந்து கொள்ள உள்ளார். எனவே இந்த கூட்டத்தில் அதிக அளவில் இளைஞர்களை பங்கேற்க செய்ய வேண்டும்" என்றார்.

கூட்டத்தில் ஞானதிரவியம் எம்.பி., மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story